• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ள கோவை பேருந்து நிலையங்கள் !

May 17, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பேருந்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து,பேருந்து நிலையங்கள் அனைத்தும் தற்காலிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வந்தன.

இதற்கிடையில், தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை முதல் இ.பாஸ் இல்லாமல் போக்குவரத்துகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து,பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறிசந்தைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பேருந்துகள் இயங்குவதற்கு தயாராகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவையில் நேற்றுவரை தற்காலிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வந்த காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் முழுமையாக தூய்மை செய்யப்பட்டு பேருந்துகள் இயங்குவதற்கு தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் வெங்காயம் மற்றும் தக்காளி காய்கறிகளை மொத்த வியாபாரம் செய்யும் சந்தையாக செயல்பட்டு வந்தது.இந்த சூழலில், வியாபாரிகளை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற கூறியதால் பெரும்பாலான சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்படுவதாகவும் போதுமான இட வசதிகளை செய்து தரக்கோரியும் அதுமட்டுமின்றி அங்கு உள்ள சரக்குகளை மாற்றுவதற்கு 3,
5 நாட்கள் அவகாசம் கேட்டும் அங்கு வந்த அரசு அதிகாரியிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க