• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் விசாரணைக் குழுவுக்கு உதவ இரண்டு பெண் உறுப்பினர்கள் நியமனம்

April 19, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானத்தின் விசாரணைக்கு உதவ பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.

இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது.
இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில்,இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று தனது விசாரணையை தொடங்கினார்.இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானத்தின் விசாரணைக்கு உதவ கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலி மற்றும் வேளாண் பல்கலைகழக பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க