September 27, 2019 தண்டோரா குழு
பேனர் விழுந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(23) . இவர் கடந்த 12ம் தேதி தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக,அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் மாநகராட்சி அதிகாரிகள் வைத்ததனர்.இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில்,ஜெயகோபால் தலைமறைவானார்.அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு மேலாக காவல்துறை தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஜெயகோபலை போலீசார் இன்று கைது செய்தனர்.