• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெல்ஜிய நாட்டின் அரசு தம்பதியினர் இந்தியா வருகை!

October 28, 2017 தண்டோரா குழு

இந்திய குடியரசு தலைவர் அழைப்பின் பெயரில்,பெல்ஜியம் நாட்டின் அரச தம்பதியினர், நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வருகின்றனர்

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பின் பெயரில், பெல்ஜிய நாட்டின் அரசர் கிங் பிலிப் மற்றும் அவருடைய மனைவி ராணி மத்திலே ஆகியோர் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.

பெல்ஜிய நாட்டின் அரசர் பிலிப் இந்தியாவுக்கு வரும்போது, அவருடன் பெல்ஜிய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்கள்,அந்த நாட்டிலுள்ள 86 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 13 தலைவர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கிங் பிலிப்பை சந்திப்பார் என்று வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக வலுவான உறவுகளை, இந்த பயணம் மேலும் பலப்படுத்தும்” என்று வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க