• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் – சபாநாயகர் ஜெயசூர்யா

November 5, 2018

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் என சபாநாயகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டுப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்காத ராஜபக்சே நியமனத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவிக்கும் ரணில் தரப்பு, தாங்களே பதவியில் தொடர்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில், ராஜபக்சேக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வரும் ஏழாம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளது.

இந்நிலையில் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும் வரை அவரைப் பிரதமராக ஏற்க முடியாது என்றும், பிரதமர் மாற்றத்துக்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை கூட்டாமல் தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வரும் 7-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்துவிட்டு தற்போது மாற்று தேதி அறிவித்ததற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க