• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரும்பான்மையை நிரூபிக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு

September 14, 2017 தண்டோரா குழு

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.

ஆளுநரின் நடவடிக்கைக்காக காத்திருந்த டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள், ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். மேலும், தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க