பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.
ஆளுநரின் நடவடிக்கைக்காக காத்திருந்த டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள், ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். மேலும், தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு