• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரிய தலையுடன் பிறந்த திரிபுரா சிறுமி மரணம்

June 21, 2017 தண்டோரா குழு

திரிபுரா மாநிலத்தில் இரண்டு மடங்கு பெரிய தலையுடன் பிறந்த சிறுமி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ரோனா பேகம், ஹைட்ரோசெஃபாலுஸ் (Hydrocephalus) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டார். இதனால், அவளுடைய மூளையில் நீர் கோர்த்து, சாதாரண குழந்தையின் தலையை விட இரண்டு மடங்கு பெரியாதாக இருந்தது.

ரோனாவின் தாய் பாத்திமா பேகம் கூறுகையில்,

“ரோனாவின் தலை 94 சென்டிமீட்டர் சுற்றளவு இருந்தது. இதன் காரணமாக மூளையில் அழுத்தம் ஏற்படுவதால், அவளாள் எழுந்து உட்கார முடியவில்லை. அவளுக்கு புதுதில்லியிலுள்ள போர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். அவர்களுடைய முயற்சியால் ரோனாவின் தலையின் சுற்றளவு 58 சென்டிமீட்டராக குறைந்தது.

அதன்பிறகு ரோனா நன்றாக தான் இருந்தாள், ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முச்சு திணறல் ஏற்ப்பட்டது. பணிக்கு சென்றிருந்த என் கணவரை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு, உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வீடு திரும்பி, ரோனாவுக்கு குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்தார். அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன், இறந்துவிட்டாள்” என்று கூறினார்.

மேலும் கடந்த 2௦13ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “Agence France Presse” என்னும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர், ரோனாவை புகைப்படம் எடுத்து, புதுதில்லிலுள்ள ஒரு மருத்துவமனை அவளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். அவளுடைய புகைப்படம் வெளியாக தொடங்கியது, உலக கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க