March 6, 2018
தண்டோரா குழு
பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன் என ஜெ.தீபா டுவீட் செய்துள்ளார்.
திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாகூறியுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா,
“பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்…சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை..இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.