• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் !

October 30, 2021 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து வருவதால் பால் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை தெற்கு தலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.பி.ஐ.மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில்,பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ.நிர்வாகிகள் சு.பழனிசாமி, யு.கே.சுப்ரமணியம்,செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க