• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் !

October 30, 2021 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து வருவதால் பால் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை தெற்கு தலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.பி.ஐ.மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில்,பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ.நிர்வாகிகள் சு.பழனிசாமி, யு.கே.சுப்ரமணியம்,செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க