• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

June 5, 2017 தண்டோரா குழு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்தார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று முன் தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தினகரன், தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடப்போவதாகவும், அதிமுக கட்சியை பலப்படுத்த முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுளள சசிகலாவை சந்திப்பதற்காக காலை பெங்களூரு சென்றார்.

அவருடன் அவரது மனைவி அனுராதா, அதிமுக எம்.பி மற்றும் 10 எம்.எல்.ஏக்கள், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.

இதனைதொடர்ந்து, இன்று மதியம் மூன்று மணி அளவில் பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு தனது மனைவி அனுராதாவுடன் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க