• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார் நளினி

June 21, 2017 தண்டோரா குழு

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு விரைவில் நளினி மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வருகிறார் நளினி. இவர் தன்னை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறைக்கு மனு அனுப்பிருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நளினியின் மனுவை தமிழக அரசுக்கு சிறைத்துறை அனுப்பி உள்ளதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து. நளினி விரைவில் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க