• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புறா கலைஞர்கள் நடத்திய புறா பறக்க விடும் போட்டி

October 2, 2017 தண்டோரா குழு

கோவையில் புறாகலைஞர்கள் நடத்திய புறா பறக்க விடும் போட்டி நடைபெற்றது.இதில் கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் பங்கேற்றன.

கோவை ஆவாரம்பாளையத்தில் வருடத்திற்கு ஒரு முறை புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெறும். இதில் கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான இந்தபோட்டியில் பங்கேற்ப்பார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் 245 புறாகலைஞர்கள் தங்களது புறாக்களுடன் பங்கேற்றார்கள்.இப்போட்டியில் கர்ண புறா,சிவப்பு கண் புறா என இரு வகையான புறாக்கள் பங்கேற்றன.

இந்த புறாக்கள் எவ்வளவு தூரம் பறக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எத்தனை முறை பல்டி அடிக்கின்றன என்பது குறித்து கணக்கிட்டு பரிசு வழங்கப்படும்.

இது குறித்து புறாக்கலைஞர்கள் தெரிவிக்கையில்,புறாக்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடக்கும் இப்போட்டியைக் அடுத்த ஆண்டு முதல் மாநில அளவில் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க