• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனித ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

May 29, 2017 தண்டோரா குழு

“புனித ரமலான் நோன்பு” இம்மாதம் 27-ம் தேதி முதல் தொடங்கியது. வரும் ஜூன் மாதம் 26-ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாப்படவுள்ளது. பண்டிகைக்காக நோன்பு தொடங்கிய முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மன் கி பாத்” என்னும் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

“இந்திய மக்களுக்கும், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும், புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெபம், ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவைதான் இந்த ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கம் ஆகும். நமது முன்னோர்கள் ஏற்படுத்திய பாரம்பரியத்தின் காரணமாக, பல சமூகம் மற்றும் மதத்தை சேர்ந்த சுமார் 1.25 பில்லியன் மக்கள் இன்று நம்மோடு வாழ்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

“இந்த புனித மாதம், உலகெங்கும் வசிக்கும் மக்களை அமைதியாலும், ஒற்றுமையாலும், இணக்கதாலும் ஒன்று சேர்க்கட்டும்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவிலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க