• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர்

May 23, 2017 தண்டோரா குழு

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பாக்டீரியாவிலிருந்து உருவாகியுள்ள புதிய உயிரினத்துக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை வைத்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பில்ட்டர்களில் புதிய பாக்டீரியாவிலிருந்து உருவாகியுள்ள புதிய உயிரினத்தை கண்டுப்பிடித்து, அதற்கு “Solibacillus Kalamii” “சொலிபாசில்லஸ் கலாமி” என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த 40 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த “High Efficiency Particulate Arrestance Filter” என்று அழைக்கப்படும் பில்டரில் இந்த புதிய பாக்டீரியாவை
நாசாவின் ஜெட் புரோலிபியன் லேபரட்டரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

JPLலில் சோதனை செய்த பிறகு, “International Journal of Systematic and Evolutionary Microbiology” என்னும் பத்திரிக்கையில் டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் இதை வெளியிட்டார்.

JPLயின் பயோடெக்னாலஜி மற்றும் பிலானாட்டரி பாதுகாப்பு குழுவின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி, டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறுகையில்,

“புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட பாக்டீரியாவின் பெயர் “Solibacillus Kalamii”. அதன் இனத்தின் பெயர்(Genus name) அதனுடைய பொதுவான பெயர்(Specius name) “Solibacillus” என்பதாகும்.

பூமிக்கு மேல் சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல வகையான பாக்டீரியா மற்றும் புஞ்சை ஆகிய உயிரினங்களுக்கு வீடாகும். அங்கு வசிக்கும் விண்வெளி வீரர்கள் இந்த பாக்டீரியாவுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த உயிரினத்துக்கு இந்தியாவின் மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்களின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை கவுரவிப்பதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மேலும் அப்துல் கலாம், 1963 ஆம் ஆண்டு நாசாவில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க