• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புண்ணாக்கு பருத்தி கொட்டை விலை உயர்வை கட்டுபடுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

September 9, 2019

கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் தவிடு, புண்ணாக்கு,பருத்தி கொட்டை உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலையை கட்டுபடுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு ஒரு வித தீர்வை கொடுத்தது.அதே போல் விவசாயிகளின் துணை தொழிலாளான கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில்,கறவை மாடுகளுக்கு வழங்கும் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு,பருத்தி கொட்டை ஆகிய கால்நடை தீவினங்களின் விலை உயர்வையும் கட்டுபடுத்த வேண்டும் எனவும்,அரசு இதற்கு தனி கவனம் செலுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புண்ணாக்கு,கடலை புண்ணாக்கு,பருத்தி கொட்டை ஆகியவற்றை கொண்டு வந்திருந்தனர்.

மேலும் படிக்க