• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகாரில் கல்லூரி தேர்வின் போது, முறைகேடு நடந்ததாக புகார்

September 2, 2017 தண்டோரா குழு

பீகார் மாநிலத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் நடந்த தேர்வின்போது, மாணவர்கள் முறைகேடுகளை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் மகாராஜா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இயற்பியல் பாடம் தேர்வு நடைபெற்றது. அப்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,புத்தகங்கள், குறிப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்து தேர்வு எழுதுவதும், ஒருவரோடு ஒருவர் விடைகளை கேட்டு எழுதுவதுமான புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

“இந்த கல்லூரியில் சுமார் 2,3௦௦ பேர் அமர்ந்து தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படிருந்தது. ஆனால், பல்கலைக்கழக ஆசிரியர்கள் 4,400 மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்ததால் இந்த முறைகேடு நடைபெற்றது என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் இது சம்பந்தமாக ஆசிரியர்களிடமிருந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அந்த கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க