• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகாரில் கல்லூரி தேர்வின் போது, முறைகேடு நடந்ததாக புகார்

September 2, 2017 தண்டோரா குழு

பீகார் மாநிலத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் நடந்த தேர்வின்போது, மாணவர்கள் முறைகேடுகளை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் மகாராஜா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இயற்பியல் பாடம் தேர்வு நடைபெற்றது. அப்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,புத்தகங்கள், குறிப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்து தேர்வு எழுதுவதும், ஒருவரோடு ஒருவர் விடைகளை கேட்டு எழுதுவதுமான புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

“இந்த கல்லூரியில் சுமார் 2,3௦௦ பேர் அமர்ந்து தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படிருந்தது. ஆனால், பல்கலைக்கழக ஆசிரியர்கள் 4,400 மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்ததால் இந்த முறைகேடு நடைபெற்றது என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் இது சம்பந்தமாக ஆசிரியர்களிடமிருந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அந்த கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க