• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 30, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். செயலாளார் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்,பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.

முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டதற்கு சிறப்பு செய்யப்பட்டது. சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து காணொளி படம் திரையிடப்பட்டது.இறுதியில் துணை முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க