• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவான்ஸா 25 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

February 27, 2025 தண்டோரா குழு

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 25 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி தலைமை தாங்கினார்..இதில் சிறப்பு விருந்தினராக கிராசிம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் முருகன் தேன்கொண்டார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள், மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் யசோதா தேவி, இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை டீன் சாந்தி ராதாகிருஷ்ணன்,துறை தலைவர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க