• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி மனு

September 23, 2019

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு அண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தற்போது உணவகங்களில் பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகள், ஸ்பூன்கள் என அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ளது.மேலும் சாம்பூ,எண்ணெய்,வாட்டர் பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை அடைத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று கோவையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி,

சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகிக்கும் கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க