• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில்மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 11 இந்தியர்கள் பலி?

October 13, 2017 தண்டோரா குழு

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பலில் சென்ற 11 இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஹாங்காங்கை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள ‘எம்ரால்ட் ஸ்டார்’ என்னும் சரக்கு கப்பலில் 26 இந்தியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக பயணித்தபோது புயலில் சிக்கியது. உடனே அந்த கப்பலிலிருந்து அபாய சிக்னல் வந்துள்ளது. பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று(அக்டோபர் 13) கடலில் மூழ்கியது.

அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் பயணித்த 3 கப்பல்கள், கடலில் சிக்கியிருந்த 13 கப்பல் ஊழியர்களை மீட்டுள்ளது. கடலில் காணாமல் போன 11 பேரை தேடும் பணியில், ஜப்பான் நாட்டு கடலோர காவல்படை மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும்,அந்த பகுதியில் ஏற்பட்டிருக்கும் சூறாவளி மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க