• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்த குழந்தையின் வாயில் 7 பற்கள்; அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

September 2, 2017 தண்டோரா குழு

அகமதாபாத்தில் ஒரு மாத குழந்தையின் வாயிலிருந்து 7 சிறிய பற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் குழந்தை பிறக்கும்போதே, அதன் வாயில் 7 பற்கள் இருந்தது. அந்த பற்களை வெளியே எடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, அந்நகரிலுள்ள சிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.அக்குழந்தையை பரிசோதித்த குழந்தை நல மருத்துவர் நிரவ் பெனானி மற்றும் பல் மருத்துவர் மித் ரமட்ரி இப்பிரச்சனை மிகவும் சிக்கலானது.இதை மிகவும் ஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 15 நிமிடம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், 7 பற்களையும் நீக்கினர்.சிகிச்சைக்கு பிறகு, அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க