• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் தப்பி ஓட்டம்

January 25, 2017 தண்டோரா குழு

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களில் 90 பேர் பிடிபட்டனர். தப்பித்து ஓடிய 60 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

இது குறித்து பிரேசில் சிறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 25) கூறியதாவது:

“பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாகாணத்தில் பாயுரு என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக் காவலர் ஒரு கைதியிடம் இருந்த கைபேசியைப் பறிமுதல் செய்ததையடுத்து கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்த 152 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்வதற்கு முன் சிறையின் ஒரு பகுதியில் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சிறை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர்.

தப்பிச் சென்ற 152 கைதிகளில் 9௦ பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். மீதம் 6௦ பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. சிறையில் நடந்த மோதலைச் சிறைக் காவலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் 12௦ பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க