• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரிட்டிஷ் தூதரகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்ட பூனை

November 25, 2017 தண்டோரா குழு

ஜோர்டான் நாட்டின் பிரிட்டிஷ் தூதரகத்தில் லாரென்ஸ் என்னும் பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தூதரகத்தால் ‘லாரன்ஸ்ஆப் அப்டோவ்ன்’ என்று அழைக்கப்படும் அந்த பூனை கடந்த மாதம் தான், விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அது தற்போது, ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்த்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், பதவியில் சேர்ந்த பிறகு, அதன் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ‘lawrencedipcat’ என்னும் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. கணக்கு தொடங்கிய ஒரே மாதத்தில் அதை சுமார் 2,500 பேர் பின்தொடர்ந்துள்ளனர்; 6௦௦௦ ரசிகர்களும் அதற்கு கிடைத்துள்ளனர்.

தற்போது லாரன்ஸ் தனது வேலைத் திறமையைக் கண்டறியும் காலத்தை (probationary period) வெற்றிகரமாக முடித்ததை அடுத்து, பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து வருகிறது.

மேலும் படிக்க