• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரிட்டன் தேர்தலில் தன் கணிப்பு தவறானதால் தன் புத்தகத்தை தின்ற பேராசிரியர்

June 12, 2017 தண்டோரா குழு

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் தன்னுடைய கணிப்பு தவறானதால் தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே பேராசிரியர் ஒருவர் தின்றுள்ளார்.

இங்கிலாந்து கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மேத்யூ குட்வின். இவர் தனது நண்பருடன் இணைந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரட்டன் பொதுத்தேர்தலில் ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் தன் கணிப்பு நடக்காவிட்டால் எனது புத்தகத்தை தின்பேன் என்றும் மேத்யூ டுவிட்டரில் சவால் விடுத்திருந்தார்.

ஆனால், நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 % ஓட்டுகள் கிடைத்தன. இதனையடுத்து மேத்யூவின் கணிப்பு பொய்யானதால் சொன்ன வார்த்தை என்னானது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேத்யூ குட்வின் ஸ்கை தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, நான் சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்றும் என் கணிப்பு தவறாக போய்விட்டதால், நான் எழுதிய புத்தகத்தை இப்போதே தின்கிறேன் எனக் கூறி அவரது புத்தகத்தை கடித்து மென்று தின்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க