• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல இயக்குநர் தாசரி நாராயணராவ் காலமானார்

May 31, 2017 தண்டோரா குழு

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாரயணராவ் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்ற தாசரி நாராயணராவ் தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 50-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும் உள்ளார்.250 படங்களில் வசனகர்த்தாவகவும் பணியாற்றியுள் அவர்,தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சனை மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தாசரி நாராயணராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘அம்மா’ எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அண்மையில் அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தாசரிநாராயணராவ், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க