• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

February 4, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் திமுக சார்பில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ” கோவிலுக்குள் பக்தன் எப்படி ஒரு பரவசத்தோடு வருவானோ அதேபோல் இந்த தணக்கன்குளம் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். மகாத்மா காந்தி அவர்கள் ‘கிராமம் தான் கோவில்’ என்று சொல்வார். அப்படிப்பட்ட கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். பின்னர் மக்களிடம் குறைகளைக் கேட்டரிந்த ஸ்டாலின், ஊராட்சி சபை என்பது ஒரு அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடியது. கிராமங்களில் இருந்து தான் அரசியல் பிறந்திருக்கிறது என்பதை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பார்க்க முடிகின்றது. ஆகவே நீங்கள் இல்லாமல் அரசியலே கிடையாது, நீங்கள் இல்லாமல் உள்ளாட்சி பிரதிநிதிகளே கிடையாது. நீங்கள் இல்லாமல் எம்.எல்.ஏ., எம்.பி., க்களே கிடையாது.

இன்றைக்கு உங்களுக்கு பல பிரச்னைகள் இருக்கிறது. சொந்தப் பிரச்னைகளை விட பொதுப் பிரச்னைகள் தான் அதிகம். அதனை இங்கு சொல்ல வந்திருக்கின்றீர்கள். பொதுப் பிரச்சினைகள் என்னவென்றால், குடிதண்ணீர் பிரச்னை – சாலை வசதி – மருத்துவமனை பிரச்னை – சுகாதாரப் பிரச்னை, பள்ளிக் கட்டிடம் வேண்டும் போன்ற பல பிரச்னைகள் இருக்கிறது.

இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் எந்தத் திட்டங்களும் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல், யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்? மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் அது எல்லாம் எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி . நீங்களே சிரிக்கிறீர்கள். இருவரையும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். காரணம் அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் .

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க