• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமரை சந்தித்தது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

May 24, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்தோம். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும்.

இலங்கை வசமுள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும்.மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக கூறினார்.

மேலும், சட்டசபையில் வைக்கப்பட உள்ள ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிரதமரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை.அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன்.

மேலும் படிக்க