• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரசவத்தில் ஒரே நேரத்தில் குழந்தை பெற்ற தாய் – மகள் !

September 30, 2017 தண்டோரா குழு

சிரியா நாட்டை சேர்ந்த தாயும் மகளுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த பாத்திமா பிரின்சி என்னும் 41 வயது தாயும் அவருடைய மகள் கேட் பிரின்சி என்னும் 21 வயது மகளும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிரியா நாட்டை விட்டு வெளியேறி துருக்கி நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அப்போது இருவரம் கர்ப்பமாய் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் ஒரே நேரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்கள் மகன்களுக்கு துருக்கி நாட்டின் தற்போதைய குடியரசு தலைவர் ரெசெப் தய்யிப் எர்டோகன் பெயரின் முதல் இரண்டு பெயரை
சூட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எர்கான் அடாஸ் கூறுகையில்,

“சிரியாவின் உள்நாட்டு போரின் காரணமாக அங்கிருந்து தப்பி இங்கு வந்த அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். தாயுக்கும் மகளுக்கும் ஒரு நேரத்தில் குழந்தை பிறந்த சம்பவம் இங்கு நடந்தது இல்லை” என்று கூறினார்.

மகப்பேறு மருத்துவர் நயீம் உன்சல் கூறுகையில்,

“அந்த இரண்டு குழந்தைகளின் பிறப்பு ஒரு அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். பாத்திமா மற்றும் அவருடைய மகளின் கணவர்கள் எங்கு இருக்கின்றனர் என்றோ குழந்தைகள் பிறப்பை பார்த்தனரோ என்று தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க