• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பியானோவில் புதையல் ! 913 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

April 24, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தில் பியானோ(இசை கருவி) ஒன்றில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 913 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு இந்தியா ரூபாய் படி 4 கோடி ஆகும்.

2௦16-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்திலுள்ள ஸ்ரோப்சியர் என்னும் இடத்தில் வசிக்கும் ஹெம்மிங் என்பவர் பியானோ ஒன்றை வாங்கியுள்ளார். அதை பழுதுபார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.உடனே அவர் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடனே அவருடைய இல்லத்திற்கு வந்து, அந்த தங்க நாணயங்களை சோதனை செய்தனர்.

மகாராணி விக்டோரியா, 7-வது எட்வர்ட் மற்றும் 5வது ஜார்ஜ் ஆகியோர் 1847 முதல் 1915-ம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்த காலத்தை சேர்ந்த தங்க நாணயங்கள் என்று அந்த சோதனையின் முடிவில் தெரிய வந்தது.அந்த பியானோவில் மொத்தம் 913 நாணயங்கள் இருந்தன என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். அந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 5௦௦௦௦௦ பவுண்ட், அதாவது இந்திய செலவாணி படி சுமார் 4 கோடி ஆகும்.

மேலும் படிக்க