• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சி – எடியூரப்பா

May 15, 2018 தண்டோரா குழு

பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார்.

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதைபோல்,ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை மக்கள் விரும்பவில்லை,பாஜகவை ஏற்றுக் கொண்டனர். காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்க மக்கள் விரும்புகின்றனர்.கர்நாடக மக்கள் எங்களுக்கு தான் முழு ஆதரவு அளித்துள்ளனர்.பிரதமர்,மோடி அமித்ஷா பிரசாரத்தால் கர்நாடகாவில் அதிக இடங்கள் கிடைத்துள்ளன.கர்நாடக தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு வந்த பிறகே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார்.ஆட்சி அமைக்க அழைக்க காங்கிரசுக்கு தார்மீக உரிமையில்லை.மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. பின் வாசல் வழியாக் ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது என கூறினார்.

மேலும் படிக்க