January 10, 2020
பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற பொங்கல் விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம், இதே போல் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக கல்லூரி வளாகத்தில் இன்று பொங்கல் விழா கல்லூரி மாணவர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் கிராமபுரங்களில் கடைபிடிக்கும் தமிழர்களின் கலாச்சாரமான பட்டு வேஷ்டி, பட்டு சேலைகள் அணிந்து பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கட்டவண்டி ஓட்டுதல், கிளி ஜோசியம் பார்த்தல்,பொங்கல் வைத்தல்,நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தெய்வத்தை வழிப்பட்டது பார்வையாளர்களிடயே வெகுவாக கவர்ந்தது.