• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.கவுடன் கூட்டணியா ? பன்னீர்செல்வம் அறிவிப்பு

May 20, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவுபட்டது.இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

சசிகலா அணியினர் அதிமுக அம்மா அணி என்ற பெயரிலும், ஓ.பி.எஸ்., அணியினர் அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாஜக-வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து சில நிமிடங்களில் மற்றொரு டுவிட்டில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவு செய்வோம் என்ற அர்த்தத்தில் தான் முதல் செய்தி வெளியிடப்பட்டது எனக்கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க