• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு -உயர் நீதிமன்றம்

October 26, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து பால் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் வாகனங்கள் உட்பட அனைத்து பால் வாகனங்களிலும்
4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பால்,ஆவின் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பால் கூட்டுறவு சங்கத்தலைவர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து,பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர் கருவியும்,பாலின் எடையை கண்டறிய ஸ்கேனிங் கருவியும் அனைத்து பால் வாகனங்களிலும் 4 மாதங்களுக்குள் பொருத்த வேண்டும் என நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க