• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு -உயர் நீதிமன்றம்

October 26, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து பால் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் வாகனங்கள் உட்பட அனைத்து பால் வாகனங்களிலும்
4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பால்,ஆவின் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பால் கூட்டுறவு சங்கத்தலைவர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து,பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர் கருவியும்,பாலின் எடையை கண்டறிய ஸ்கேனிங் கருவியும் அனைத்து பால் வாகனங்களிலும் 4 மாதங்களுக்குள் பொருத்த வேண்டும் என நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க