• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி

February 10, 2018 தண்டோரா குழு

பாலஸ்தீன நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அதிபர் யாசர் அராஃபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றார். தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில் இன்று ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க