• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

January 16, 2019 தண்டோரா குழு

பாலமேட்டில்காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

உழவர் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என பெயர் பெற்ற, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து துவக்கினார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 988 காளைகள் களமிறக்கப்பட்டன. 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.இவர்களில் 846 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகி களமிறங்கினர்.அதைப்போல்,வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை அடக்கும் வீரர்களுக்கு டூவீலர்கள், எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, பசுங்கன்று, பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் 602 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.நேரமின்மை காரணமாக 125 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படவில்லை.ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த மாடாக மலப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரது மாடு தேர்வு, அவருக்கு மாருதி ஆம்னிவேன் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அலங்காநல்லூர் ஒத்தவீட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க