• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலக்காடு இளைஞர் போலந்து நாட்டில் கொலை

January 28, 2023 தண்டோரா குழு

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் போலந்து நாட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப் மற்றும் ரிஷினா பானு. இவர்களது மகன் இப்ராஹிம் ஷெரிப். பத்து மாதங்களுக்கு முன்பு போலண்டு நாட்டிற்கு ஐ. என். ஜி. வங்கியில் பணிபுரிய சென்றுள்ளார். இவர் அந்த நாட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ‘வொர்க் பிரம் ஹோம்’ பணி புரிந்து வந்து உள்ளார். கடந்த 24 ஆம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் 26 ஆம் தேதி அவர்களது தாயாருக்கு போலந்து நாட்டில் உள்ள மலையாளம் அசோசியேஷன் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது உடல் 7 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்குள் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கொண்டுவரப்படும் என அந்த நாட்டு எம்பாசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக போலந்து நாட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் பைனல் ரிப்போர்ட் விரைவில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிப்பார்கள் என போலந்து நாட்டு எம்பசி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க