• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டிப்பு – சிறப்பு நீதிமன்றம்

March 2, 2018 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து  இவர்களுடைய ஜாமீன் மனு கடந்த 12 ஆம் தேதி தள்ளுபடி ஆன நிலையில், கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர்.இம்மனுவை விசாரித்த  நீதிபதி துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க