• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டிப்பு – சிறப்பு நீதிமன்றம்

March 2, 2018 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து  இவர்களுடைய ஜாமீன் மனு கடந்த 12 ஆம் தேதி தள்ளுபடி ஆன நிலையில், கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர்.இம்மனுவை விசாரித்த  நீதிபதி துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணைவேந்தர் கணபதியின் காவல் மார்ச்.16 வரை நீட்டித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க