February 6, 2018
தண்டோரா குழு
கோவையில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீதான ஜாமீன் மனு 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.அன்றைய தினம் இரவே இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி் ஜான் மினோ முன்னிலையில் நடைபெற்றது.விசாரணையின் போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய 8 ம் தேதி வரை அவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதால் , ஜாமீன் மனு மீதான விசாரணை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கணபதி தரப்பு வழக்கறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.
மேலும்,இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி , பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருடன் தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், துணைவேந்தரின் மனைவி பெயர் இடம் பெறவில்லை எனவும் வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.