• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாமகவில் இணைந்ததை வரலாற்று பிழையாக கருதி வெளியேறுகிறேன் – மாநில துணைத்தலைவர் இரா.மணிகண்டன்

April 10, 2019 தண்டோரா குழு

பாமக துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பாமக ஒரு குடும்ப கட்சி எனவும், அதிமுக – பாமக கூட்டணி பேரக்கூட்டணி என அவர் விமர்சித்துள்ளார்.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாமக மாநில துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். திராவிட அரசியலுக்கு மாற்று என அக்கட்சியின் நிறுழனர் ராமதாஸ் சொன்னதை நம்பி கட்சியில் இணைந்ததாகவும், திராவிட கட்சிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற அன்புமணி ராமதாசால் முடியுமென நம்பியதாகவும் அவர் தெரிவித்தார். மாற்று என நம்பிய அன்புமணி ராமதாஸ், கூட்டணி அமைத்து ஏமாற்றம் அளித்ததாகவும், அதிமுக மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமை கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டணி அமைத்தது அதிர்ச்சியளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், கூட்டணி அமைக்க பாமக பேரம் நடத்தியதாகவும், அதிமுக – பாமக கூட்டணி பேரக் கூட்டணி எனவும் கூறிய அவர், இக்கூட்டணியை மக்கள் காறிக், காறி துப்புகிறார்கள். கடுமையாக மாறி, மாறி விமர்சித்த உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனும், அன்புமணியும் ஒன்றாக வாக்கு கேட்பதை எப்படி ஏற்க முடியாது.

இக்கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.தொண்டர்களுடன் கலந்தலோசித்து கூட்டணி அமைத்ததாக சொல்வது முழுக்க முழுக்க பொய். பாமக ஒரு குடும்ப கட்சி. அதிமுக, திமுகவை விமர்சிக்க அன்புமணிக்கு தகுதியில்லை. ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் பாமகவை கெடுகிறார்கள். ராமதாசை ஏமாற்றுகிறார்கள். காடுவெட்டி குரு வன்னிய சமூகத்திற்காக வாழ்ந்தவர்.பாமகவிற்காக உழைத்து வாழ்க்கையை குரு கெடுத்து கொண்டவர். கடனில் தவிக்கும் குரு குடும்பத்திற்கு பாமக எதுவும் செய்யவில்லை. ராமதாஸ் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழகத்தில் பேரம் என்பது உருவானது. வன்னியர்களால் ராமதாஸ் குடும்பம் பயன் பெறுவதை முற்றுப்புள்ளி வைக்கவே கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியவர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி. டிடிவி தினகரன் சமரசம் இல்லாமல் செயல்படுவதாகவும், 40 தொகுதிகளிலும் துணிச்சலாக போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் நல்ல நிர்வாகியும் அல்ல தொண்டர்களை மதிப்பவரும் அல்ல. பூத்துகளை கைப்பற்றுவோம் என அன்புமணி ரவுடி போல பேசுகிறார். அதிமுக கூட்டணியை கட்சியினர் ஏற்றுக்கொண்டாலும், மக்கள் ஏற்று கொள்ளவில்லை. பெரிய தொகையை வாங்கி கொண்டு கூட்டணி அமைத்துள்ளனர். வன்னியர் நல வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரே கட்சி பாமக, வருமானம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் பாமக நிதி வசூல் செய்கிறது. திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளரை, தலைமை கண்டுகொள்ளவில்லை. மகன் வென்றால் போதுமென ராமதாஸ் நினைக்கிறார். மற்றவர்கள் ஜெயிப்பதை பற்றி அவருக்கு கவலையில்லை. எஸ்ஆர்எம் உரிமையாளர் பாரிவேந்தரை மிரட்டி பாமக பணம் பெற்றுள்ளது. பாமகவில் இணைந்ததை வரலாற்று பிழையாக கருதி வெளியேறுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க