• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 30, 2020 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தியும், நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்த முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் அபுதாகிர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் அமைந்திருந்தது. நாடு முழுவதும் விவசாய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் தீர்ப்பு விவசாய சட்டம் விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நெஞ்சில் குத்தியது போல இந்த வழக்கில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தி இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்குகிறது.இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க