• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

December 6, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி மீட்பு தீர்ப்பு என்ற ஒன்று எழுதப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க