April 1, 2019 தண்டோரா குழு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரி வாரியம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க, முதலில் 2018 ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின்னர் மார்ச் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் இன்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது அதில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் ஆதார் – பார் கார்டு இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.