• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன

October 16, 2020 தண்டோரா குழு

கோவை பாஜக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல்கலாம் ன் 89வது பிறந்தநாளை முன்னிட்டும் கலாமின் கனவை நினைவாக்கும் வகையிலும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜகவின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ் தலைமையில் கோவை மாநகர் பகுதியில் உள்ள ராமலிங்க செட்டியார் மேல்நிலை பள்ளி, பிருந்தாவன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் குமரன் செயலாளர்கள் அபிநவ், ஸ்ரீதர் மற்றும் மண்டல் தலைவர் அர்ஜுன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க