January 19, 2019 தண்டோரா குழு
பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பயப்படாத ஒரே இயக்கம் அதிமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கொடநாடு நாடு எஸ்டேஸ்ட் விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமீன் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும். பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும்; கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி அதிமுக. எதற்காக அச்சப்பட வேண்டும். அதிமுக என்பது இமயம்; கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.