• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி சாதனையை மிஞ்ச பசுவை வைத்து படம் எடுங்கள்-கட்ஜு

May 5, 2017 தண்டோரா குழு

ஹாலிவுட்டில் குரங்குகளை வைத்து படம் எடுத்தது போல், பாலிவுட்டில் பசுக்களை வைத்து படம் எடுத்தால் பாகுபலியின் வசூலை விட பத்து மடங்கு அதிகம் வசூலிக்கலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேயன் கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி அன்று வெளியான பாகுபலி 2 படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை முறியடித்து பாலிவுட் படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில், கட்ஜுவின் இந்த கருத்து நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர் கருத்துக்களை பகிர்ந்து வரும் கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் “ஹாலிவுட்டில் “The Planet of Apes” என்ற ஒரு படம் வெளியானது. அதில் மனிதர்களை குரங்குகள் அடிமைப்படுத்தி ஆள்வது போல் கதை அமையும்.

அது போல் பாலிவுட் இயக்குனர்கள் “The Planet of Cows” என்று படம் எடுத்து பசுக்கள் மனிதர்களை அடிமைப்படுத்தி ஆள்வது போல் காட்சிகள் அமைத்தால் பாகுபலி படத்தை விட பத்து மடங்கு வசூல் செய்யலாம் என்று யோசனை கூறியுள்ளார்.

பசுக்களை தெய்வங்கள் என்று சிலர் கூறி மாட்டிறைச்சி உண்பதை தடுக்க முற்படுவதும், மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கும் மனப்போக்கும் பெருகி உள்ள இந்த நேரத்தில், பசுக்களை ஹீரோக்களாக கட்ஜு வர்ணித்து கூறியுள்ளது சமூக வலை பக்கங்களில் வேறுபட்ட கருத்தை பெற்றிருக்கிறது.

இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் காட்டுதீ போல் பரவ, ஒரு நெட்டிசன் கிராபிக்ஸ் முறையில் “The Planet of Cows” என்ற கற்பனை படத்திற்கு ஒரு சுவரொட்டியே வடிவமைத்து விட்டார்.

கட்ஜு அதையும் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிரவே சுவாரஸ்யம் எகிறியது.பலர் இதை வரவேற்று தங்கள் கருத்துக்களை பகிர, சிலர், இதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஏற்கனவே, சினிமா நடிகை கஜோல் தன சமூக வலைத்தளத்தில் இருந்து மாட்டிறைச்சியின் படங்களை அகற்றியதற்கும் கட்ஜு ஆட்சேபம் தெரிவித்திருந்தார். “மாட்டிறைச்சி உண்பது தவறில்லை, ஏறத்தாழ உலகில் உள்ள அனைவரும் மாட்டிறைச்சி உண்கிறார்கள்” என்றும் கருத்து பதிவிட்டுருந்தார்.

மேலும் படிக்க