June 17, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் 7 முறையாக தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளது.அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும், கொண்டாடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.