• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானில் போலீஸ் சூட்டில் 4 தீவிரவாதிகள் சாவு

January 19, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் பாகிஸ்தான் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ரிஸ்வான் என்ற ஆசிப் சோட்டு உள்பட 4 தீவிரவாதிகள் இறந்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புத் துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 19) கூறியதாவது:

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப் சோட்டுவின் தலைக்கு 3௦ லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிப் சோட்டு பாகிஸ்தானில் உள்ள பாரூகாபத் என்னும் இடத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் 4 மோட்டார் சைக்கிளில் வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேகுர்புரா என்னும் ரயில் சாலையில் காவல் துறையினர் நிறுத்தி சரணடையும்படி கட்டளையிட்டனர்.

அதை ஏற்க மறுத்த அவர்கள் காவல் துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 3 பேர் தப்பியோடி விட்டனர்.

உயிரிழந்தவர்களில் தீவிரவாதத் தலைவர் ஆசிப் சோட்டுவும் ஒருவர். மற்றொருவர் டாக்டர் ஷாகிர் உல்லாஹ் என்ற அலி சுபியன், நூருல் அமீன் ஆவார். அவர்கள் வைத்திருந்த நவீன துப்பாகிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க