August 7, 2019 தண்டோரா குழு
பில்லூர் அணை நிரம்பியதால் 4மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்…இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பியது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாகிய மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதையடுத்து பில்லூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும் . தற்சமயம் நீரின் அளவு 97 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நான்கு மதகுகளின் வழியாக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளால் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதி கிராமங்களாகிய தேக்கம்பட்டி, ஓடந்துறை,பாலப் பட்டி, ஆலாங்கொம்பு, சிறுமுகை ,ஜடையம்பாளையம் ஆகிய பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.